பெலாரசின் சபலென்கா.இந்தியன் வெல்ஸ்நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கோப்பையை கைப்பற்றினார்.
பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர்அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் ,பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர்.முதல் செட்டை 3-6 என இழந்த சபலென்கா, 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இவர், 'டைபிரேக்கர்' வரை சென்ற 3வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார்.
இரண்டு மணி நேரம், 31 நிமிடம் நீடித்த போட்டியில் சப லென்கா 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில்,இத்தொடரில் பைனல் வரை சென்ற ரிபாகினா, 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சபலென்கா நீடிக்கிறார். போலந்தின் இகா ஸ்வியாடெக் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷ்யாவின் மெத்வெடேவ் ஆண்களுக்கான ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் ஒற்றையர் பைனலில் மோதினர். சின்னர் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் பட்டத்தை தட்டிச் சென்றார்.
0
Leave a Reply