25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெற்றிலை ரசம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெற்றிலை ரசம் .

தேவையான பொருட்கள் - 2 கருப்பு வெற்றிலை

அரைக்க:- 1டீ ஸ்பூன்மிளகு 1டீ ஸ்பூன்சீரகம்,.4 பூண்டு .1டீ ஸ்பூன்தனியா,1ப.மிளகாய் , 2தக்காளி . 1கப்புளி கரைசல்

தாளிக்க:- 1டீ ஸ்பூன்கடுகு, 2 ஸ்பூன்பசு நெய்,2 சி.மிளகாய்,1டீ ஸ்பூன்சீரகம்,1டீ ஸ்பூன்ம,தூள்,1டம்ளர் தண்ணீர்,கொத்தமல்லி இலை 2 ஸ்பூன், அலங்கரிக்க – வெற்றிலைதுண்டுகள்

செய்முறை - தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில், தனியா, மிளகு, சீரகம், ப.மிளகாய், பூண்டு, ஆகியவற்றை போட்டு சற்று கொர கொரப்பாக, அரைக்கவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், சி.மிளகாய், தாளித்ததும், ம.தூள், உப்பு போடவும்.அடுத்து புளிக் கரைசலை ஊற்றி, 5 நிமிடம் புளி வாசனை போக கொதித்ததும், அரைத்த விழுதை போடவும்.

கொதித்து ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.சிறிய கடாயில் நெய் காய்ந்ததும், வெற்றிலை துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கினதை ரசத்தில் கலக்கவும்.ஒன்று சேர கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு, ரசத்தை பௌலுக்கு மாற்றவும்.

இப்போது, சுடசுட, மருத்துவ குணம் நிறைந்த,வெற்றிலை ரசம் தயார்.சளி, இருமலுக்கு ஏற்ற ரசம்.சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News