தேனீக்களின் விஷம் புற்றுநோய் செல்களை அழிக்க சிறந்த ஒரு மருந்து .
ஆஸ்திரேலிய புற்றுநோய் மைய ஆய்வகத்தில் நடைபெற்ற ஆய்வில் புற்றுநோய் செல்களை அழிக்க தேனீக்களின் விஷம் சிறந்த ஒரு மருந்து என்று தெரியவந்து உள்ளது. தேனீ விஷத்தில் காணப்படும் மெலிட்டின் என்ற சேர்மம் மிகவும் சக்தி வாய்ந்தது. இது வலி உணர்வை உருவாக்கும் மூலக்கூறு ஆகும். இந்தமூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிக்க உதவுமா? என்று ஆய்வுகளில் இறங்கினர்.அதாவது, மெலிட்டின் மனித உடலுக்குள் செலுத்தப்பட்ட20 நிமிடங்களுக்குள் புற்றுநோய் செல்களுக்கு இடையில் உருவாகும் இணைப்பை அழித்து விடுவதையும், புற்றுநோய் செல்கள் வளர்ச்சி உடனே தடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிந்தனர். இது மிகப்பெரிய அதிசயம் என்று ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் பெர்த் வகை தேனீக்கள் மிகவும் ஆரோக்கியமான தேனீக்கள் இனம் என்று கருதப்படுகிறது. தற்போது, இந்த வகை தேனீக்களின் விஷம்தான், புற்றுநோய்க்கு எதிரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.இந்த தேனீக்களை கார்பன்டை ஆக்சைடு ஊற்றி தூங்க வைத்து, உறைநிலையில், தேனீயின் அடிவயிற்றில் இருந்து விஷ முள் வெளியே எடுக்கப்பட்டு, கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் புற்று நோய் கட்டி வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோய் செல்கள் இறப்பை தூண்டுவதிலும் மெலிட்டின் திறன் வாய்ந்தது என்று கருதப்படுகிறது. மனிதனுக்கு வரும் மோசமான நோய்களுக்கும் இயற்கை எளிதான தீர்வுகளை வைத்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டோம் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறினர்.
0
Leave a Reply