நார்வே செஸ்போட்டியின் 8-வது சுற்றில், மாக்னஸ் கார்ல்செனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.
ஆஸ்லோவில் நடைபெற்று வரும் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றில், தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக தரம் வரிசையில் முதலிடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளார்.
அபார வெற்றி: கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 50-வது காய் நகர்த்தலில் கார்ல்செனை தோற்கடித்தார்.
2-வது முறை: இந்த நடப்புத் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்செனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.
10 சுற்றுகள் கொண்ட இத்தொடரின் முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.
0
Leave a Reply