"மன்னர் ராஜேந்திர சோழன்-I இன் கடற்படைப் பயணத்தின் 1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை27,2025)"மன்னர் ராஜேந்திர சோழன்,I இன் கடற்படைப் பயணத்தின்1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.குதிரையில் சவாரி செய்யும் பேரரசர் கப்பலை பின்னணியாகக் கொண்டு இருப்பது போன்ற படம் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளையின் தலைவர் ஆர். கோமகன்ஒரு நாணயத்தை வடிவமைத்து ,நாணயத்தை வெளியிடுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாணயம் வெளியிடப்பட்டது. குதிரையில் சவாரி செய்யும் பேரரசரின் உருவம், கப்பலைபின்னணியாகக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது.பிரதமரால் வெளியிடப்பட்ட₹1,000 நாணயம்.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நாணயத்தைப் பெற்றுக்கொண்டனர்.
0
Leave a Reply