விவாசயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 19 (பத்தொன்பது) இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2025-2026 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வத்ராப், கான்சாபுரம், முஷ்டாக்குறிச்சி, இராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, தேவதானம், சேத்தூர், மேட்டுப்பட்டி, சுந்தரபாண்டியம், முடுக்கன்குளம் மற்றும் சென்னிலைக்குடி ஆகிய இடங்களில் 11 (பதினொன்று) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மேலூர் துரைச்சாமியாபுரம், அயன்கொல்லங்கொண்டான், ஜமீன்நல்லமங்களம், கோவிலூர், முகவூர், கம்மாப்பட்டி, கீழகாஞ்சிராங்குளம் மற்றும் ஏ.முக்குளம் ஆகிய பகுதிகளில் 8 (எட்டு) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் (GR”A”) ரூ.2545/- மற்றும் பொது ரகம் (common) ரூ.2500/-ம் விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ECS மூலம் வரவு வைக்கப்படும்.
எனவே, விருதுநகர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் செயல்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லினை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் வியாபாரிகள் நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக தேவையான விபரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக தொலைபேசி எண். 04562 252607-ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply