25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே ,தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே ,தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

 தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் தமிழ்நாடுகிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் தமிழக இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தாகை வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கத் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த அபிநந்த் கபிள்டென்னிஸ்), வெனிசாஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வல்லச்சாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), ஜயந்த், நந்தனா இருவரும் கிரிக்கெட்), கமலி (அலைச்சறுக்கு , அபிநயா, ஜித்தின் அர்ஜூனன் இருவரும் தடகளம்).தக்க்ஷந்த் (செஸ்) ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கினார்.  இது அருமையான் திட்டம் என்று பாராட்டி, ஷிவம் துபே தனது சொந்த பணத்தில் இருந்து ,ஒவ்வொவருக்கும் தலா ரூ.70 ஆயிரம் விதம் மொத்தம் ரூ.7 லட்சமும் வழங்கினார்.

விழாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குனர் கே.எஸ்.விஸ்வ தன், தமிழ்நாடு கிரிக்கெட்சங்கசெயலாளர் ஆர்.ஐ.பழனி,  -உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News