ஜப்பான் ஓபனில் சிந்து வெற்றி; காயத்தால் விலகிய சாத்விக்-சிராக் ஜோடி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் சூப்பர்-750 பாட்மின்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மலேசியாவின் லிங் சிங் வோங்வை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
மறுபுறம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் டேனியல் லங்கார்ட் - மட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்த நிலையில், சாத்விக்சாய்ராஜுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் டென்மார்க் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
0
Leave a Reply