சுமித் நாகல் அசத்தல் வெற்றி; 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
இத்தாலியில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சுமித் நாகல் ருமேனியாவின் சீசர் கிரெட்டுவை எதிர்கொண்டார்.
ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய நாகல், முதல் செட்டை 6-2 எனவும், இரண்டாவது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த வெற்றியின் மூலம் அவர் ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply