25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் 21st february
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 21st february

மாற்றுத்திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. 

இதில் நாடு முழுவதும் இருந்து 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.11 பிரிவில் அரியானா வீரர் அன்குர் தமா 18 நிமிடம் 22.29 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

வட்டு எறிதலில் எப்.55 பிரிவில் தமிழகவீரர் முத்துராஜா (36.20 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

பெண்களுக்கானஈட்டி எறிதலில் எப்.53 பிரிவில் அரியானா வீராங்கனை காஞ்சன் லகானியும் (8.39 மீட் டர்), எப்.54 பிரிவில் தமிழக வீராங்கனை கீர்த்திகாவும் (11.87 மீட்டர்) தங்கப்பதக்கம்  பெற்றனர்.

போட்டி முடிவில் அரியானா 49 தங்கம், 32 வெள்ளி, 25 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்

தமிழ்நாடு 17 தங்கம், 18 வெள்ளி, 21வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. 

பரிசளிப்பு விழாவில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி பொதுச்செயலாளர் ஜெயவந்த் குண்டு ஹமனவார், பொருளாளர் சுனில் பிரதான், துணைத் தலைவர் சந்திரசேகர், தமிழ் நாடு பாரா ஸ்போர்ட்ஸ் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News