விளையாட்டு போட்டிகள் 21st february
மாற்றுத்திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது.
இதில் நாடு முழுவதும் இருந்து 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.11 பிரிவில் அரியானா வீரர் அன்குர் தமா 18 நிமிடம் 22.29 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
வட்டு எறிதலில் எப்.55 பிரிவில் தமிழகவீரர் முத்துராஜா (36.20 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கானஈட்டி எறிதலில் எப்.53 பிரிவில் அரியானா வீராங்கனை காஞ்சன் லகானியும் (8.39 மீட் டர்), எப்.54 பிரிவில் தமிழக வீராங்கனை கீர்த்திகாவும் (11.87 மீட்டர்) தங்கப்பதக்கம் பெற்றனர்.
போட்டி முடிவில் அரியானா 49 தங்கம், 32 வெள்ளி, 25 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்
தமிழ்நாடு 17 தங்கம், 18 வெள்ளி, 21வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது.
பரிசளிப்பு விழாவில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி பொதுச்செயலாளர் ஜெயவந்த் குண்டு ஹமனவார், பொருளாளர் சுனில் பிரதான், துணைத் தலைவர் சந்திரசேகர், தமிழ் நாடு பாரா ஸ்போர்ட்ஸ் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
0
Leave a Reply