25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் 14 JAN 2026.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 14 JAN 2026.

குஜராத்தில் (வித்யாநகர்) விஜய் மெர்ச்சன்ட் டிராபி காலிறுதி முதல் இன்னிங்சில் மும்பை 633/8, உ.பி., அணி 135/10 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி183/4 ரன் எடுத்து, 681 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

வரும் ஜன. 18ல் மெல்போர்னில் புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலிய ஓபன் துவங்க உள்ளது. இதற்கான ஆண்கள், பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின.

நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 35,செஸ் வரலாற்றில் ஐந்து முறை உலக சாம்பியன்.பல் வேறு பிரிவுகளில் நடந்த தொடரில் மொத்தம் 20 முறை சாம்பியன் பட்டம்வென்றுள்ளார். வரும் மே 25-ஜூன் 5 வரை நடக்கவுள்ள நார்வே செஸ் தொடரில் மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

நெதர்லாந்து, பெல்ஜியத்தில், வரும் ஆக. 15-30ல் பெண்களுக்கானஉலக கோப்பை ஹாக்கி தொடர்,  நடக்க உள்ளது. ஐதராபாத்தில் வரும் மார்ச் 8-14ல் இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கும். இந்தியா, இத்தாலி உட்பட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.முடிவில்,'டாப்-3' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News