ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம்
ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம் 24.04.2025 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும் அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.
காலை 7.30 மணி அளவில் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவிலில் ஸ்தாபகர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும், ஸ்தாபகரின் ஜோதிக்கும் பூஜைகள் நடத்தி பின்னர் ஜோதியினை ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, மத்தியசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக தொடர் ஓட்டத்தின் மூலம் ராமசாமி ராஜா நகருக்கு (துலுக்கப்பட்டி) ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எடுத்துச்செல்வார்கள்.
காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
24.04.2025 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில் "கலா ரத்ன" "இசை அரசர்" ஸ்ரீ சந்தீப் நாராயண் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
0
Leave a Reply