25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தகவல்.

விருதுநகர்,  மாவட்ட   வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும்  மையத்தின்  ஒவ்வொரு  மாதமும்   சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன்படி , படித்த   வேலை  தேடும்  இளைஞர்களுக்காக  வரும் 17.07.2026 அன்று   வெள்ளிக்கிழமை   காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை   வேலைவாய்ப்பு  முகாம்,  விருதுநகர்   சூலக்கரையில்  உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு   மற்றும்   தொழில்நெறி   வழிகாட்டும்  மையத்தில்   நடைபெறவுள்ளது.

                  இத்தனியார்   வேலைவாய்ப்பு  முகாமில்    20 -க்கும் மேற்பட்ட  பிரபல   முன்னணி  நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு;  I.T.I. . டிப்ளமோ   மற்றும்  பொறியியல்  படிப்பு  ஆகிய  கல்வித்  தகுதி உடைய   பணியாளர்களை   தெரிவு  செய்யவுள்ளார்கள்.  இந்த  அரிய வாய்ப்பினை பயன்படுத்த   விரும்பும் வேலைநாடுநர்கள் 17.07.2026  அன்று  வேலைவாய்ப்பு  முகாமில் கலந்து  கொள்வதற்கு  முன்பாக www.tnprivatejobs.tn.gov.in   என்ற இணையதளத்தில்   தங்களது சுய  விவரங்களை  பதிவு  செய்துவிட்டு  சுய விவரச் சான்றிதழ்  (RESUME)> அனைத்து   கல்விச்சான்றிதழ்,   ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன்  கலந்து  கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும்  இச்சேவையானது   முற்றிலும்   கட்டணமில்லா சேவையாகும்.

              இம்முகாமில்  கலந்து    கொள்ள  விரும்பும்  தனியார்  துறை  நிறுவனங்கள் விருதுநகர்  மாவட்ட  வேலைவாய்ப்பு  அலுவலகத்திற்கு  நேரில்  வருகை  புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு   அலுவலர்  அவர்களை  நேரிலோ  அல்லது vnrjobfair@gmail.comஎன்ற மின்னஞ்சல்  வாயிலாக  தொடர்பு  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம்  மூலம்  பணிநியமனம்  பெறுபவர்களது வேலைவாய்ப்பு   அலுவலக  பதிவு  மூப்பு  எவ்விதத்திலும்  பாதிக்கப்படாது  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News