25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


வரம் தருபவர் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரம் தருபவர் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர்.

தடைகளை தகர்த்து வரம் தர காத்திருக்கிறார் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர். செக்டர் 22 ஜி பிளாக்கில் உள்ள இக்கோயிலை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வகிக்கிறது.

காமம், கவலை, கோபத்தால் மனித மனம் அலை பாய்கிறது. 'அது எப்படியாகுமோ? இது எப்படியாகுமோ?" என்ற வருத்தம் அடிக்கடி வருகிறது. குழந்தைப் பருவம் முடிந்து வளர வளர இந்த குணம் அதிகரிக்கிறது. ஆனால் குழந்தையிடம் சோர்வோ,மனச்சுமையோ ஏதுமில்லை. அடம் பிடித்தாலும் சற்று நேரத்தில் மறந்து விட்டு மற்ற குழந்தைகளுடன் விளையாடுகிறது. இந்த சிறுகுழந்தைகள் வழிபடும் குழந்தை சுவாமியாக விநாயகர் இருக்கிறார்.

கனமான யானை வடிவில் இருந்தாலும், மூஞ்சூறு சுமக்கும் விதத்தில் பரம லேசான மூர்த்தியாகவும் இருக்கிறார். அவரது யானை முகத்தை பார்த்தாலே பரவசம் உண்டாகும். அந்த விநாயகராக இங்கு மூலவராக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தடைகள் விலக சங்கடஹர சதுர்த்தியன்று சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

இதற்கான புராண காரணம் இதோ.. ஒருமுறை சிவனிடம், "உங்கள் தலையை எனக்குப் பலி கொடுங்கள்" எனக் கேட்டார் விநாயகர். இதற்காக மூன்று கண்கள் கொண்டதேங்காயை உண்டாக்கி சிதறுகாயாக அர்ப்பணித்தார் சிவன். ஆணவம் என்னும் ஓட்டை உடைத்தால் அருள் என்னும் இளநீர் வெளிப்படும் என்பதே இதன் தத்துவம்.

எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய்உடைத்தால் பிரச்னை தவிடு பொடியாகி விடும்.இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஆக. 29, 2022ல் நடந்தது. துர்கை, நவக்கிரக சன்னதியும் இங்குள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News