25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (27.02.2026) இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட் (IOCL) நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (ALIMCO) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதித்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.05 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.5.25 இலட்சம் மதிப்பில் மின்கல மூன்று சக்கர சிறப்பு நாற்காலிகளை(Neo motion) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ALIMCO மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு, கடந்த 2026 ஜனவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 404 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தற்போது இந்தியன் ஆயில் கார்பரேஷன் (Indian Oil Corporation) சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 110 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.39.60 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, ஆக்சில்லா ஊன்றுகோல்கள், முழங்கை ஊன்றுகோல்கள், ரோலேட்டர், பிரெய்லி பிரம்பு, சுகம்யா பிரம்பு, CP சக்கர நாற்காலி, காதொளி கருவிகள், செயற்கை உறுப்பு, காலிபர்ஸ் உள்ளிட்ட உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் அலிம்கோ நிறுவனத்தின் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News