சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 19.03.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 19.03.2025 அன்று பிற்பகல் 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட மத்திய மாநில சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply