2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமானது 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது .
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமானது விருதுநகர் மாவட்டத்தில் 21 நாட்கள், 18 வயது உட்பட்ட (Under 18) மாணவ ஃ மாணவியர்களுக்கு, வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை காலை 6.30 முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைபந்து, யோகா, கால்பந்து மற்றும் வளைகோல்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முகாமில் பால் / முட்டை/ பிஸ்கட் வழங்கப்படும்.
பயிற்சி முகாமில் முடிவில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மாணவ / மாணவியர் இப்பயிற்சி முகாமில் சேர்ந்து கொள்ள தங்கள் பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்து கொண்டு விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
0
Leave a Reply