25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமானது 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமானது 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமானது விருதுநகர் மாவட்டத்தில் 21 நாட்கள், 18 வயது உட்பட்ட (Under 18) மாணவ ஃ மாணவியர்களுக்கு, வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை காலை 6.30 முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைபந்து, யோகா, கால்பந்து மற்றும் வளைகோல்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முகாமில் பால் / முட்டை/ பிஸ்கட் வழங்கப்படும்.

பயிற்சி முகாமில் முடிவில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மாணவ / மாணவியர் இப்பயிற்சி முகாமில் சேர்ந்து கொள்ள தங்கள் பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்து கொண்டு விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News