மனித மூளைக்கு ஈடு இல்லை!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வந்தாலும், ஆற்றல் பயன்பாட்டில் மனித மூளையின் திறனை இன்னும் எட்ட முடியவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிக்கலான கணக்கீடுகள் மற்றும் தகவல் செயலாக்கங்களை மேற்கொள்ள மனித மூளை வெறும் 12 முதல் 20 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால் அதே அளவிலான பணிகளைச் செய்ய உயர்தர ஏஐ கணினி அமைப்புகளுக்கு சுமார் 2.7 பில்லியன் வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த மின்சாரத்தில் அதிக செயல்திறனுடன் இயங்கும் மனித மூளை, இயற்கையின் அதிசயமான படைப்பாகவே தொடர்ந்து திகழ்கிறது. ஆற்றல் சிக்கனத்தில் மனித மூளைக்கு நிகராக ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வளர வேண்டிய நிலை இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
0
Leave a Reply