அமைச்சர் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ், கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் TURIP-2025-2026ன் கீழ், பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் (16.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ், ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் Tamil Nadu Urban Road Infrastructure (TURIP) 2025-2026ன் கீழ், ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளும், தெருக்களில் குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இதனால் சாலைகள் மேடும் பள்ளமுமாக மாறி, போக்குவரத்துச் சீராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சாலைகளைப் பழுதுநீக்கம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ. 21 கோடி நிதி வழங்கியுள்ளார். தற்போது நகராட்சியில் சுமார் 280 இடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை விரைந்து முடித்து, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எங்கு எல்லாம் சாலைகள் சேதமடைந்துள்ளதோ, அந்தப் பகுதிகள் அனைத்தும் உடனடியாகச் சரிசெய்யப்படும்.இத்தகைய மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply