அனைத்து ரயில்களிலும் வந்தே பாரத் உட்பட ,இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமல் .
அனைத்து விரைவு ரயில் களிலும், இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது.குறைந்தபட்சமாக, 5 ரூபாய் முதல் அதிகபட் சமாக, 45 ரூபாய் வரை உயரும்' என, ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் ஊழியர் களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், வரும் 26ம் தேதி முதல் சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்படும் என, கடந்த 21ம் தேதி ரயில்வே அறிவித்தது.
அதன்படி, முதல் 215 கி.மீ.,துாரத்துக்கு மேல் செல்லும் ரயில்களுக்கு மட்டும் கட்டணம் -உயர்த்தப்படுகிறது.புறநகர் மின்சார ரயில் களில், கட்டணம் உயர்வு இல்லை. மாதந்திர சீசன் டிக்கெட்டிலும், கட்டணம் உயர்த்தப்பட வில்லை.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் சென்னையில் இருந்து, மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், கன்னியாகுமரி, கோவை செல்லும் ரயில்களில், ரயில்வேயின் புதிய கட்டண உயர்வுபடி, முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 5 ரூபாய்; ஸ்லீப்பர் மற்றும் 'ஏசி' பெட்டிகளில் 15 ரூபாய் வரைகட்டண உயர்வு இருக்கும் என, தெரிவித்தனர்.
0
Leave a Reply