ஸ்பெயினில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று தொடக்கம்.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 8 சுற்றுகளாகஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் 2-வது சுற்று உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் பந்தயம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை ஸ்பெயினின் கிரனடாவில் நடக்கிறது. 51 நாடுகளைச் சேர்ந்த 434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
24 பேர் கொண்ட இந்திய அணியில் ரிதம் சாங்வான் (25 மீட்டர் பிஸ்டல்)உலகபோட்டியில் 9 பதக்கம் வென்ற அனுபவசாலியான அஞ்சும் மோட்கில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு) மெகுலி கோஷ் (10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ்) செயின் சிங், அகில் ஷியோரன், தனுஷ் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
0
Leave a Reply