திருக்கோகர்ணம் மகாபல நாதர்
சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கம் ஒன்றைப் பெற்றான் ராவணன். அதை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுவனாக வந்த விநாயகர் தடுத்து திருக்கோகர்ணம் என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். கர்நாடகாவிலுள்ள இத்தல சிவன் மகாபலம் பொருந்தியவர் என்பதால் 'மகாபல நாதர்' எனப் பெயர் பெற்றார். இவருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். குருக்கள் மந்திரம் மட்டும் சொல்லுவார். பூக்களால் அர்ச்சனையைநாம் செய்யலாம். சுவாமியின் திருமேனி பூவின் இதழ் போல நீண்டும், லிங்க பாணம் இல்லாமல் துளையாக இருக்கும். அதற்குள் ராவணன் கொண்டு வந்த ஆத்ம லிங்கம் உள்ளது. ஆறடி உயரம் கொண்ட இதனை 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகத்தின் போது மட்டும் தரிசிக்கலாம். சிறுவனாக வந்த விநாயகருக்கும் இங்கு கோயில் உள்ளது.
0
Leave a Reply