சமூக நல அலுவலகத்தின் கீழ் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2005 ன் கீழ்; இளநிலை உதவியாளர் / தட்டச்சர் (JUNIOR ASSISTANT CUM TYPIST) பணியிடத்தினை நிரப்புவதற்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க தேவயான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு தேர்ச்சி (Both Higher Typing) பெற்றிருக்கி வேண்டும், மேலும், கணினி பயன்பாட்டியல் (Computer on Office Automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே,விண்ணப்பிக்க தகுதியுடைய (பெண்கள் மட்டும்) 30.09.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மேற்கண்ட தகுதிச்சான்றுகளுடன் நோில் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply