வீட்டில் பச்சைமிளகாய் செடிகளைவளர்க்கும் வழிமுறைகள்!
பச்சை மிளகாயின் விலை அடிக்கடி உயர்ந்து மக்களை கவலைக்குள்ளாக்குகிறது. பச்சை மிளகாய் பயன்பாடு என்பது சமையலில் தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்தப் பச்சைமிளகாயை எளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கலாம்.
இதற்கு முதலில் நிழலோடுகூடிய வெயில் படும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், 3 முதல் 4 அங்குல ஆழத் தொட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தத் தொட்டியில் நீர் ஊற்றினால் வழிந்தோடக்கூடிய வகையில் துளை உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையான இயற்கை உரத்தை இட்டு, மண்ணை நிரப்பி, தரமான மிளகாய் விதைகளை எடுத்து தொட்டியில் 1 அங்குல ஆழத்தில் நட வேண்டும். 5 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் தினமும் அந்தத் தொட்டியை வைக்கவும்.
தொடர்ச்சியாக செடி வளர்கிறதா எனக் கவனித்து வர வேண்டும். அதோடு செடி ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் ஊற்றி வர வேண்டும். மிளகாய் செடி விதைத்ததிலிருந்து 50 முதல் 60 நாள்களுக்குள் மிளகாயை அறுவடை செய்யலாம்.
0
Leave a Reply