விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள்.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஏலாவை 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக், அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரை 6-4, 6-4 என தோற்கடித்து காலிறுதியை எட்டினார்.
மேலும், அமெரிக்காவின் கோகோ காஃப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை 4-6, 6-3, 6-4 என போராடி வென்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா, உலகின் முன்னணி வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவை 6-2, 7-6 என்ற செட்களில் அதிரடியாக வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜப்பானின் ஷின்டாரோ மோசிசுகியை 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
0
Leave a Reply