உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி முன்னேறியது.
ரவுண்டு-16 ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கீ நாகாநிஷி - ரின் இவானகா ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி 21-23, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜுனைதி ஆரிப் - யாப் ராய் கிங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
0
Leave a Reply