உலக பாட்மின்டன்: மூன்றாவது சுற்றில் சிந்து.
டெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சிந்து, கனடாவின் வென் யு ஜாங்-ஐ எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய சிந்து 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஹூடா, கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார். கடுமையாக போராடிய உன்னதி 21-11, 9-21, 21-23 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இலங்கையின் துமிந்து அபேவிக்ரமாவை சந்தித்தார். அபாரமாக விளையாடிய ஆயுஷ் 21-8, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ ஜோடி, மக்காவ் அணியின் லியோங் இயோக் சோங்-வெங் சி ஜோடியை 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.
0
Leave a Reply