25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாவட்ட அளவிளான  வன்கொடுமை   தடுப்பு விழிப்புணர்வு  மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட அளவிளான  வன்கொடுமை  தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு  விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவானது 29.03.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள்  கலைக்கப்பட வேண்டும்.எனவே நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பாக தற்போது  உள்ள விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது கலைக்கப்படுகிறது. 

            புதிய குழு அமைத்து, அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்- செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள்.  இக்குழுவில்   அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களாக  காவல்கண்காணிப்பாளர் மற்றும் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் (Gazatted Officers) செயல்படுவார்கள்.

            நாடாளுமன்றம் அல்லது  மாநில சட்டமன்ற  உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  (பட்டியலினத்தைச்  சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்) அல்லது  மாநில அரசால்  பரிந்துரை    செய்யப்படும்,  விருதுநகர் மாவட்டத்தினைச்    சேர்ந்த  இரண்டு நபர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற    உறுப்பினர்களாக  ஆதிதிராவிடர்    மற்றும்    பழங்குடியினர்  வகுப்பைச் சேர்ந்த   சமுக ஆர்வலர்கள்   மற்றும்   கல்வியாளர்கள்    விண்ணப்பிக்கலாம்.

               எனவே , விருப்பமுள்ள  தகுதி வாய்ந்த   நபர்கள்   விருதுநகர்  மாவட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்  நல்வாழ்வு  குறித்த  மாவட்ட  அளவிலான   வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக  சேர்வதற்கு வருகின்ற 15.07.2026 –க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S . அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News