இந்திய வீராங்கனை சலிஹா அஷ்மிதா ,மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் கால் இறுதியில் …..
கோலாலம்பூரில் மலேசிய மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பேட்மிண் டன் போட்டி,நேற்று நடந்த பெண்கள் ஒற் றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சலிஹா அஷ்மிதா 21-13, 21-16 என்ற நேர்செட்டில் மலேசியாவின் கோஹ் ஜின் வெய்யை எளிதில் வீழ்த்தி கால் இறுதிக்குமுன்னேறினார்.
இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், மற்றொரு ஆட்டத்தில் 21-16, 8-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிஜார்ஸ் பெல்ட்டிடமும் , தேவிகா சிஹாக் 16-21, 13-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் யூபெய்யிடம் தோற்று வெளியேறினார்.
இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-எம்.ஆர்.அர்ஜூன் இணை 14-21, 15–21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹூகிய் யூயான்–லின் ஜியாங்யி ஜோடியிடம் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் தோல்வியை தழுவியது.
0
Leave a Reply