பூரி நீண்ட நேரம் உப்பலாக இருக்க.....
பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு sugar சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் அப்படியே உப்பலாக இருக்கும்.
.கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.
பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
.பாகற்காயை நறுக்கி, உப்பு, தயிர் சேர்த்து நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக பிழிய வேண்டும். அதன்பிறகு பொரியல் செய்தால் பாகற்காயின் கசப்பே தெரியாது.
மிகுந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply