25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தேர்தல் மை அழியாமல் இருக்க காரணங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் மை அழியாமல் இருக்க காரணங்கள்.

தேர்தலில் வாக்களிப்பவர்  வாக்களித்ததை உறுதிசெய்வதற்காக இடது கை ஆள்காட்டி விரலில் மை ஒன்று வைப்பார்கள். அது சில வாரங்கள் அழியாமல் இருக்கும். அது என் உடனடியாக அழிவதில்லை? காரணங்கள் என்ன ?

இந்தியாவில்தேர்தல்மை பயன்படுத்தும்முறை 1962ம்ஆண்டுமக்களவைத்தேர்தலின்போதுமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது விரலில் மை அழியாமல் இருக்க முக்கிய காரணம்.மையில் உள்ள சில்வர் நைட்ரேட் (AgNO 3) என்ற வேதிப்பொருள் தான், இந்த மையை விரலில்வைக்கும்போது, அது தோலில்உள்ளஉப்புச்சத்துமற்றும்ஈரப்பதத்துடன்வினைபுரிந்து,சூரியஒளி படும்போது, சில்வர் நைட்ரேட் சில்வர் குளோரைடாக மாறி தோலுடன் மிகக் கடுமையாக ஒட்டிக்கொள்கிறது. 

இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாது. சோப்பு, ஆல்கஹால் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு கழுவினாலும் இந்த மை எளிதில் அழியாது. இந்த மை தோலின் மேற்பகுதியில் மட்டும் இல்லாமல், நகம் மற்றும் தோலுக்கு இடையில் உள்ள பகுதியில் ஊடுருவிச் செல்கிறது. நகம் வளர்ந்து பழைய தோல் செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை சுமார் 2 முதல் 4 வாரங்கள் இந்த மை நீடிக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த அழியாத மை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News