25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கோயம்புத்தூரில் வருகிற 29.01.2026 மற்றும் 30.01.2026 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள 2026 -சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில்  பங்கு பெற விரும்பு ஜவுளித் தொழில் முனைவோர்கள்  13.01.2026-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோயம்புத்தூரில் வருகிற 29.01.2026 மற்றும் 30.01.2026 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள 2026 -சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விரும்பு ஜவுளித் தொழில் முனைவோர்கள் 13.01.2026-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு இலக்கை அடைய ஜவுளிதொழில் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், கருத்தரங்குகள் (Conference), கண்காட்சி (Exhibition), வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு (Reverse Buyer Seller Meets) மற்றும் அழகுநயப்பு காட்சி (Fashion Show) ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் 13.01.2026-க்குள் மதுரை மண்டல துணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் ddtextilesmdu@gmail.com.மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளித்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித்தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களை பெற மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், எண்.34 விஸ்வநாதபுரம் மொயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை-14. தொலை பேசி எண்கள்.82200-17071/ 82206-56182 . என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மேற்காண் கண்காட்சியில் Spinning, Fabric, Garments, Home Textiles, Integrated Manufacturers, Brands from Tamilnadu, Technical Textiles, Sustainablity and Recycling, Raw Material/ Recycled Textile/Man Made Fibre ஆகிய காட்சியரங்குகள் பங்கு கொள்ள இருப்பதால் ஜவுளித் தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News