25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உடனுக்குடன் காபி கலக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடனுக்குடன் காபி கலக்க....

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வரும், விருந்தாளிகளுக்காக, அடிக்கடி காபி கலக்க நேரிடும். அப்போது பாலை திரும்ப திரும்ப சுடவைத்து காபி கலக்கினால், பால் சீக்கிரம் சுண்டிவிடும். இரண்டு கேஸ் அடுப்புகளிலும் இரண்டு, பெரிய பாத்திரங்களில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் ஒன்றில் பாலும், மற்றொன்றில் காபி டிக்காஷன் உள்ள சிறிய பாத்திரத்தை வைத்து, அடுப்பை, 'சிம்'மில் வைத்து விடவும். பாலும், டிகாஷனும் எப்போதும் சூடாக இருக்கும். உடனுக்குடன் காபி கலக்கலாம்.

பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒரு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்தால் சூப்பரான அப்பளத் துவையல் ரெடி.

சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண் ணெய்யை சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு துண்டு தேங்காய் போட்டு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.

மோர்க்குழம்பு, கூட்டு ஆகியவற் றிக்கு தேங்காய் எண்ணெய்யில் தாளித்து கொட்டினால், மணமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News