25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


கரும்புக்கு ஊக்கத்தொகை தேர்தல் அறிக்கையில் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க நட வடிக்கை எனக் கூறி ரூ. 3500  கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏமாற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கரும்புக்கு ஊக்கத்தொகை தேர்தல் அறிக்கையில் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க நட வடிக்கை எனக் கூறி ரூ. 3500  கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏமாற்றம்.

 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி நீர்நிலை அதிகம் என்பதால் கண்மாய், ஆற்று நீர் தேக்கங்கள் அருகே நெல்லும் அதனை அடுத்து கரும்பு விவசாயம் அதிக சாகுபடி நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 8000 ஏக்கர் கரும்பு சாகுபடி நடந்தது. தற்போது 2000 ஏக்கர் அளவுக்கு மட்டுமே கரும்பு பயிரிட்டு அதிக அளவில் வெல்லம் வியாபாரிகளுக்கு மாற்றி விடுகின்றனர்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகிரி சுற்றுவட்டார விவசாயிகள் சிவகிரி அருகே தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து அனுப்பி வந்தனர். இதில் 2018-19ல் சப்ளை செய்த சுமார் 500 விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை.இதனால்தொடர் பிரச்சினைகளால் சாகுபடி பணிகளுக்கு செலவழிக்க முடியாமல் தரிசாக விட்டுள்ளனர்.

ஐந்து ஆண்டு தொடர் போராட்டங்களால் பாதி தொகையான ரூ.12 கோடி மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு தவணை தேதியை கடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.255 ல் இருந்து ரூ.349 என உயர்த்தியதால் ரூ. 3500 என கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க நட வடிக்கை எனக் கூறி 4 ஆண்டுகளைக் கடந்து தற்போது தான் ரூ.3500 வந்துள்ளனர். இது மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்காது என தெரிவித்துள்ளனர். கரும்பு விவசாயிகளின் நிலையை இப்பகுதி ஆளுங்கட்சியினர் கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே சாகுபடி பரப்பு 30 சதவீதமாக சுருங்கிவிட்டது கரும்பு விவசாயிகளின் நிலையை இப்பகுதி ஆளுங்கட்சியினர் கண்டு கொள்வதில்லை. அறிவிப்பு நிலுவைத் தொகை கேட்டு ,போராடி வரும் இப்பகுதி விவசாயிகளுக்கு, அரசாங்கம் சரியான முடிவு எடுக்குமா? என்று விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News