25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாழைத்தண்டு ஜூஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாழைத்தண்டு ஜூஸ்.

வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு சிறப்பான வழியாகும்.வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.மேலும், குடலில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. 

இதன் சாற்றை இரண்டு அல்லது மூன்று வேளை வீதம் தினமும் அருத்தினால். வறட்டு இருமல் நீங்கும்.நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டு சாறு ஒரு டம்ளர் குடித்தால் விஷம் தானாக இறங்கி விடும்.வாழைப்பூச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால், கை கால் எரிச்சல், வெள்ளைப்படுதல் மற்றும்மாத விலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும்.

வாழைத் தண்டில் கால்ஷியம் பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்களும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துகளும் உள்ளன.நரம்புகளில் தேங்கிநிற்கும் உப்பு படிவங்கள் நீங்கி பார்வையை தெளிவடையச் செய்யும்.வாழத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தை தூண்டி சுறுசுறுப்பு அடைய செய்யும்.

பித்தத்தை குறைக்கவும் உதவும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு, சூப் செய்து அருந்துவது நல்லது வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம் மூட்டு வலி வந்து கைகால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறை குடித்தால் மிகுந்த பயனளிக்கும்.

வாழைத்தண்டை சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தணியும்.வாழைத் தண்டை சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து, தீப்புண் மேல் பூசி வர தீப்புண் ஆறும். சீழ் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். இதன் பூவை பொரியல் செய்து உண்பதால் அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும் குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்று புழுக்களை ஒழிக்கும் திறன் கொண்டது. பித்த நோய்களையும் இருமலையும் நீக்கும்.

வாழைத்தண்டு காது சம்பந்தமான பிரச்னை, கருப்பை நோய்கள் மற்றும் ரத்தக் கோளறுகள் ஆகியவற்றை குணமாக்கும் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும் .

தேள்,பூரான் கடித்த இடத்தில் வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை பூச வலி குறையும்.வாழைத்தண்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வாழைத்தண்டு சாறு குடிப்பதால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாய்ப்புகள் உண்டு. இது இயற்கையான சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கப் பெரிதும் உதவுகிறது.

வாழைத்தண்டை ஜூஸ், பொரியல், கூட்டு, அல்லது அடை போன்ற பல்வேறு வடிவங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News