சிறுநீரக கற்கள் வரவிடாமல் தடுக்க…
சிறுநீரகக் கற்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை முறைகளை எடுப்பதன் மூலமும் சரியான வாழ்க்கை முறை மாற்றங்களாலும் இதனைத் தடுக்கலாம்.
தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நல்ல சுகாதாரமான தண்ணீரைப் பருக வேண்டும் .
இளநீர், மோர், பார்லி நீர் போன்றவற்றை அவ்வப்போது பருகுவது, சிறுநீரகக் கற்களை வரவிடாமல் தடுக்கும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த நடவடிக்கை நன்மை பயக்கும்.
உணவில் உப்பு மற்றும் காரத்தன்மையைக் குறைத்தல் சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கான முக்கிய வழி.
நீரிழிவு நோயாளிகள் தங்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
சிறுநீரகக் கற்கள் கொண்ட குடும்ப வரலாறு கொண்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதும் நல்லது.
0
Leave a Reply