ஜூனியர் வாள்வீச்சு போட்டி இன்றும், நாளையும் கோவையில்….
மாநிலஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்போட்டி தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டிசார்பில் கோவை துடியலூரில் உள்ள எஸ்.என்.எஸ். அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளில் சிறுமிகளுக்கும், 2-வது நாளில் சிறுவர்களுக்கும் போட்டி நடத்தப்படும். தமிழ் நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டி தலைவர் சுப்பையா தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் இதன்அடிப்படையில் ஒடிசாவில் ஜனவரி 5 முதல் 10-ந்தேதி வரை 33-வது தேசிய ஜூனியர் வாள்வீச்சு போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
0
Leave a Reply