பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் விராட் கோலி..
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 'ஏ'பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை அரையிறுதிக்கு வீழ்த்தி முன்னேறியது. சதம் விளாசிய கோலி, இந்திய வெற்றிவாய்ப்புக்குவசப்பட்டது.ஒருநாள் அரங்கில் அதிகரன் எடுத்தவர் பட்டியலில் கோலி(299போட்டி,14,085 ரன் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சகவீரர் சச்சின்(463ல் 18,426) நீடிக்கிறார்.2வது,4வது இடத்தில் முறையே சங்ககரா (இலங்கை, 404 14,234), பாண்டிங் (375ல் 13704) உள்ளனர்.
சங்ககராவை கோலிக்கு முந்த இன்னும் 150 ரன் தேவை. சச்சின் சாதனையை எட்ட 4,341ரன் தேவை. ஏற்கனவே அதிக சதம் அடித்தவர்பட்டியலில் சச்சினை(49) முந்தி முதலிடம் பெற்றார் கோலி (51). தற்போது 36வயதாகும் இவர்,தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் அதிக ரன்எடுத்து சாதிக்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடுவார் கோலி 2022ல்'T20' உலக கோப்பையில் 82 ரன்எடுத்து அசத்தினார். சாம்பியன்ஸ் டிராபியிலும் கைகொடுத்துள்ளார். துபாய் ஆடுகளத்தில் 'டாப்ஆர்டர்’பேட்டர் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால் வெற்றி வசப்படும் நிலைஇருந்தது. 'சாம்பியன்' வீரர் என்பதை நிரூபித்தார். 50ஓவர் போட்டியில் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார். இவரது சதம் தான்இந்தியா- பாகிஸ்தான் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
0
Leave a Reply