25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில்,  கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில்,  கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.

இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு

இதன் ஒரு பகுதியாக, இன்று (09.04.2026) 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில், கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, கல்லூரியில் பயிலும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கோலப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு   வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

உறுதிமொழி ஏற்பு:

 "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

போட்டிகள்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவியர்களிடையே ரங்கோலி போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

கையெழுத்து இயக்கம்

தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *