வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ,தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(29.01.2026) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் 28.01.2026 அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும், பதிவுகளில் மாற்றங்கள் கோரியும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது விண்ணப்பங்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்
.மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2026) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்களை விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தகுதியுள்ள எந்தவொரு நபரும் விடுபடக் கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் வாக்காளர் பதிவு அலுவலர்களைக் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply