உலக கராத்தே கூட்டமைப்பு சார்பில் 'கராத்தே 1 சீரிஸ் ஏ' தொடரில் அலிஷா சவுத்ரி 'வெண்கலப் பதக்கம்’ வென்றார்.
உலக கராத்தே கூட்டமைப்பு சார்பில் 'கராத்தே 1 சீரிஸ் ஏ' தொடர் ஜார்ஜியாவின் டிபிளிசி நகரில் நடத்தப்படுகிறது.இந்தியா சார்பில் அலிஷா சவுத்ரி உலகின் முக்கிய தொடரான இதில் பங்கேற்றார்.55 கிலோ குமிட்டே பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குரோஷிய வீராங்கனையை 8-0 என வென்றார்.காமன்வெல்த் விளையாட்டில் 2 தங்கம் வென்றிருந்த அலிஷா, 'கராத்தே 1' தொடரில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். இந்திய கராத்தே சங்கம் இவருக்கு 1.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
0
Leave a Reply