25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங் களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங் களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங் களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.அதிக வருவாய், பாரம்பரிய நகரங் கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்திற்கு 15 ரயில்வே ஸ்டேஷன் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது.மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது.

 

ஸ்டேஷன் போர் டிகோ பகுதியில் அலங்கார முகப்பு அமைத்தல், நடை மேடை மேம்படுத்துதல், வாகன காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், லிப்ட் வசதி, நிழற்குடை வசதிகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இங்கு இரண்டாவது நுழைவாயில், காத்திருப்போர் அறை, நடைமேடை மேற்கூரை பணிகள் மந்தமாக நடக்கிறது. லிப்ட் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் மற்றும் செயல் பாட்டில் உள்ளது . விரைவில் பணிகளை முடித்து மக்கள் சிரமத்தை குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News