இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியக் கருவி ஹோல்டர் மானிட்டர்,
இதயத்தின் துடிப்பு ஒய்வில்லாத ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஒவ்வொரு மாற்றத்தையும் ஒரு சாதாரண ஈ.சி.ஜி.யினால் பதிவு செய்ய முடியாது, இதற்குக் காரணம் உண்டு. பரிசோதிக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே இதயத்தின் மின்னழுத்த இயங்கலை ஈ.சி.ஜி.யானது பதிவு செய்கிறது. சில நோயாளிகளுக்கு ஏற்படும் துடிப்புக் குறைபாடு, அதிக துடிப்பு, திடீர் மயக்கம், மார்பு வலி, நெஞ்சு படபடப்பு போன்றவை எப்போதும் வரக்கூடியவை அல்ல. எனவே, இவற்றைஈ.சி.ஜி.யினால் துல்லியமாகக் கண்டறிய முடியாது. இப்படி விட்டு விட்டுஏற்படும் நாடித்துடிப்பைக் கண்டுபிடிப்பதற்கு ஹோல்டர் மானிட்டர் (Holter monitor) மிகச்சிறந்த சாதனமாக உள்ளது.
ஹோல்டர் மானிட்டர் என்பது சிறிய,கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாதனம். 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம்வரை தொடர்ந்து ஈ. சி. ஜி. யைப் பதிவு செய்யும் கருவியும் கூட. நோயாளியின் மார்பில் சில மின்முனைகள் (Electrodes) பொருத்தப்பட்டு, ஒரு சிறிய ரெக்கார்டருடன் இந்த ஹோல்டர் மானிட்டரானது இணைக்கப்படும். ஹோல்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும்போதும் நோயாளி தனது வழக்கமான தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம்.
0
Leave a Reply