25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியக் கருவி ஹோல்டர் மானிட்டர்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியக் கருவி ஹோல்டர் மானிட்டர்,

இதயத்தின் துடிப்பு ஒய்வில்லாத ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஒவ்வொரு மாற்றத்தையும் ஒரு சாதாரண ஈ.சி.ஜி.யினால் பதிவு செய்ய முடியாது, இதற்குக் காரணம் உண்டு. பரிசோதிக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே இதயத்தின் மின்னழுத்த இயங்கலை ஈ.சி.ஜி.யானது பதிவு செய்கிறது. சில நோயாளிகளுக்கு ஏற்படும் துடிப்புக் குறைபாடு, அதிக துடிப்பு, திடீர் மயக்கம், மார்பு வலி, நெஞ்சு படபடப்பு போன்றவை எப்போதும் வரக்கூடியவை அல்ல. எனவே, இவற்றைஈ.சி.ஜி.யினால் துல்லியமாகக் கண்டறிய முடியாது. இப்படி விட்டு விட்டுஏற்படும் நாடித்துடிப்பைக் கண்டுபிடிப்பதற்கு ஹோல்டர் மானிட்டர் (Holter monitor) மிகச்சிறந்த சாதனமாக உள்ளது.

ஹோல்டர் மானிட்டர் என்பது சிறிய,கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாதனம். 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம்வரை தொடர்ந்து ஈ. சி. ஜி. யைப்  பதிவு செய்யும் கருவியும் கூட. நோயாளியின் மார்பில் சில மின்முனைகள் (Electrodes) பொருத்தப்பட்டு, ஒரு சிறிய ரெக்கார்டருடன் இந்த ஹோல்டர் மானிட்டரானது இணைக்கப்படும். ஹோல்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும்போதும் நோயாளி தனது வழக்கமான தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News