2026-2027 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், 2026-27-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
இவ்விருதுக்கான விண்ணப்ப படிவத்தை tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள https://cms.tn.go.in/cms migrated/document/forms/Social Award App26 27.pdf Link அல்லது இணைப்பில் காணும் QR code -யை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ 31.07.2026 மாலை 06.00 மணி வரை பெறப்படும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply