25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


2026-2027 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026-2027 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

சாதிப் பாகுபாடற்ற  சமூக நல்லிணக்கத்தையும்,  சமூக ஒற்றுமையினையும்  கடைபிடிக்கும்  ஊராட்சிகளை  ஊக்குவித்து  கௌரவிக்கும்  வகையில்,  தகுதி  படைத்த 10 ஊராட்சிகளுக்கு  சமூக நல்லிணக்க  ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 இதனடிப்படையில்,  2026-27-ஆம் ஆண்டிற்கான  சமூக நல்லிணக்க  ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

  இவ்விருதுக்கான விண்ணப்ப படிவத்தை tn.gov.in என்ற இணைய தளத்தில்   உள்ள https://cms.tn.go.in/cms migrated/document/forms/Social Award App26 27.pdf Link   அல்லது   இணைப்பில்  காணும்  QR code -யை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் .

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ   31.07.2026 மாலை 06.00 மணி வரை பெறப்படும். தாமதமாக  பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S  அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News