ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரம், செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நரிக்குடி வட்டாரம், இலுப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருந்தாளுநர்கள்-2, ஆய்வக நுட்புநர்நிலை (Lab Technician Gr-III)-2, செவிலியர்கள்(RCH,NCD)-6, பல்நோக்கு சுகாதாரபணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW HI Gr-II)-2, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker)-4, தொழில்சார் சிகிச்சையாளார் (Occupational therapist) – 01, சிறப்பு கல்வியாளர் (Special Educator)-01 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 29.12.2025 முதல் 14.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply