25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சில்லி சப்பாத்தி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சில்லி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:
மிஞ்சிய சப்பாத்தி - 4 அல்லது 5,
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 2,
குடைமிளகாய் - பாதி (விருப்பப்பட்டால்),
தக்காளி சாஸ் (Ketchup) - 1 மேசைக்கரண்டி,
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு.

செய்முறை:

சப்பாத்திகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு கடாயில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், தேவையான உப்பு மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.வறுத்து வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, சாஸ் அனைத்து சப்பாத்திகளிலும் படுமாறு நன்கு கிளறவும்.

சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி சாப்ட் ஆகும் வரை 2 நிமிடம் மூடி வைத்து, இறுதியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சப்பாத்திகளை முன்கூட்டியே வறுத்து சேர்ப்பது சில்லி சப்பாத்திக்கு மொறுமொறுப்பான தன்மையைத் தரும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்தை குறைத்துக் கொள்ளலாம்.மிஞ்சிய சப்பாத்திகளைப் பயன்படுத்தி 10 நிமிடங்களில் சுவையான சில்லி சப்பாத்தி செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News