இந்தியா 'ஏ' அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை 'ஏ' அணியை எதிர்கொண்டது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், காலேவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி ஆதிக்கம் செலுத்தியது.
முதல் இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 366 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த இந்தியா 'ஏ' அணி 9 விக்கெட் இழப்புக்கு 543 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
2-வது இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 209 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் ஆஷேன் பண்டாரா 87 ரன்கள் எடுத்தார். இந்தியா 'ஏ' அணியின் குர்னூர் பிரார் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
வெற்றிக்கு 33 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் (25*), அமன் மொகதே (11*) ஆகியோர் சிறப்பாக விளையாட, இந்தியா 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரையும் இந்தியா 'ஏ' அணி கைப்பற்றியது.
0
Leave a Reply