25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


கத்தரிக்காய் ரசவாங்கி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கத்தரிக்காய் ரசவாங்கி.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ,
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
தனியா - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்- 2,
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு சிறிய கப்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
கடுகு -1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - ½ டீஸ்பூன்,
எண்ணெய் -2 டீஸ்பூன்,
‬‎உப்பு -  தேவையான அளவு.


செய்முறை:

கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.
துவரம்பருப்பை வேகவைக்கவும். கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள்,உப்பு,புளிக்கரைசல்சேர்த்துவேகவிடவும்.
இதனுடன், அரைத்துவைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு,உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
இந்த கத்தரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News