விளையாட்டு போட்டிகள்.18th april
குண்டு எரிதல்,
இந்தியாவின் நிஷ்சே ஆசிய சாம்பியன்ஷிப் (18வயது) குண்டு எறிதலில் வெள்ளி வென்றார். துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட நிஷ்சே, ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.59 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளி வென்றார். இத்தொடரில் இவர் கைப்பற்றிய இரண் டாவது பதக்கம் இது.
செஸ்
('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி ' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடர் புனேயில் நடக்கிறது.நேற்று ஐந்தாவது சுற்று போட்டி நடந்தன. இந்தியாவின் வைஷாலி, மங்கோலியாவின் பக்குயாக்கை எதிர்கொண்டார். இதில் 52வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார்.
ஐந்து சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினெர் (4.0) முதல் இடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ஹம்பி (3.5), திவ்யா (3.5), வைஷாலி (2.5), ஹரிகா (2.5) அடுத்த நான்கு இடங்களில் உள்ளனர்.
வட்டு எரிதல்.
இந்தியாவின் லக்சித்தா பெண்களுக்கான வட்டு எறிதலில் (41.30 மீ.,) வெண்கலம் கைப்பற்றி னார். மா சென்யி (53.81, சீனா), ஜாவோ அன்கி (47.89, சீனா) தங்கம், வெள்ளி வென்றனர்.
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் சவுரியா (13.80 வினாடி) வெண்கலம் வசப்படுத்தினார்.
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஆர்த்தி, 24.31 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்திய அணி 3 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் வென்று உள்ளது.
பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை
உலக கோப்பை கிரிக்கெட் ,இந்தியாவில் நடக்க உள்ள தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் பெண்கள் அணி தகுதி பெற்றது.
ஐ.சி.சி., பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் (செப். 29-அக். 26) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி பாகிஸ்தானில் நடக்கின்றன. 6 அணிகள் மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.
0
Leave a Reply