பச்சை பட்டாணி சேமியா உப்புமா.
தேவையான பொருட்கள்:
சேமியா (வறுத்தது) - 1 கப்,பச்சை பட்டாணி - 1/4 கப்,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1,தக்காளி (நறுக்கியது) - 1 (விருப்பப்பட்டால்)
கேரட், பீன்ஸ் - சிறிதளவு (நறுக்கியது),பச்சை மிளகாய் – 2,இஞ்சி - 1 சிறிய துண்டு,
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.,எண்ணெய்/நெய் - 2
டேபிள் ஸ்பூன்.
தண்ணீர் - 1.5 முதல் 2 கப் வரை (1 கப் சேமியாவிற்கு),
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சேமியா வறுக்கப்படாவிட்டால், சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும்
வரை வறுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகள்
(கேரட், பீன்ஸ்) மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
1 கப் வறுத்த சேமியாவிற்கு, 1.5 முதல் 2 கப் வரை தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு
உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும், வறுத்த சேமியாவைச் சேர்த்து கிளறவும்.
மிதமான தீயில் வைத்து, வாணலியை மூடி 5-7 நிமிடங்கள் வேகவைக்கவும் .(தண்ணீர்
வற்றும் வரை).
தண்ணீர் வற்றி சேமியா வெந்ததும், அடுப்பை அனைத்து, சிறிது நெய் மற்றும்
கொத்தமல்லி இலைகள் தூவி சூடாகப் பரிமாறவும்.
உதிரியான உப்புமா கிடைக்க, சரியான அளவு தண்ணீர் (1:1.5 விகிதம்) பயன்படுத்துவது
அவசியம்.
0
Leave a Reply